Saturday, November 24, 2018

ரணில் அரசாங்கம் குறித்து நான் உண்மையை சொன்னால் மக்கள் கண்ணீர் வடிப்பர்“ -ஜனாதிபதி

November 25, 2018

நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்கவுடன் தான் முன்னெடுத்த கஷ்டமான நிருவாக நடவடிக்கைகளை இங்குள்ளவர்கள் சரியாக அறிவார்களாயின் கண்ணீர் வடிப்பார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்திருந்ததாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல எம்.பி. தெரிவித்தார்.

நேற்று கண்டியில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் முன்னெடுத்த மூன்றரை வருட நிருவாக நடவடிக்கை தொடர்பில் ஒரு புத்தகத்தை எழுதப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். வங்குரோத்து அரசியல் முன்னெடுப்புக்களையே தான் கடந்த மூன்றரை வருடங்களாக முன்னெடுத்தேன் எனவும் ஜனாதிபதி கூறியிருந்ததாக கெஹெலிய எம்.பி. நினைவுகூர்ந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாமதித்தாவது சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். நாடு செல்லும் விதத்தில் விட்டு விட்டால், எமக்கென்று நாடொன்று எஞ்சாது என தெரிவித்து, மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment