Monday, November 26, 2018

வல்வெட்டித்துறையில் பதற்ற நிலை - சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 7 பேர் கைது!

2018-11-26

தமிழீழ விடுதலைப் புலிகளின்  தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட முற்பட்ட, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உட்பட 7 பேர் வல்வெட்டித்துறையில் இன்று காலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீருவில் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வல்வெட்டித்துறை ஆலடியில் அமைந்துள்ள, தலைவர் பிரபாகரனின் வீட்டின் முன்பாக, துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த 4 பேரின் அடையாள அட்டைகளை பறித்துச் சென்ற போலிசார், அவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இன்று வல்வெட்டித்துறையில் பொலிசார் ஆயுதங்களுடன் சோதனை நடவடிக்கைகளி்ல் ஈடுபட்டுள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment