Friday, November 30, 2018

எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றில் நம்பிக்கை இல்லா பிறேரணை தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார். சந்திப்பின் பின் த. தே. கூ தெரிவிப்பு.


November 30, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் சந்திப்பு  இடம்பெற்று சற்று முன் முடிவடை ந்த நிலையில,  எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாமல் கூட்டம் முடிவடைந்து.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதி கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது, அரசுக்கு எதிராக ஏற்கனவே முன்வைத்த  நம்பிக்கை இல்லா பிறேரணை தொடர்பில் ஜனாதிபதி  நடவடிக்கை எடுப்பார் என
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்ட சுமந்திரன் தெரிவித்தார்.

அதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிதிகள் ஜனாதிபதியை சந்திக்க  செயலகம் நோக்கி சென்றுள்னர்.

0 comments:

Post a Comment