25.11.2018
தேர்தல் ஒன்று நடந்தால் தமது கட்சியான பொதுஜன பெரமுன வெற்றி பெறுவது உறுதியென தனது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார் மஹிந்த ராஜபக்ச.
கடந்த ஒரு மாத காலமாக இலங்கையில் அரசொன்று இல்லாத சூழ்நிலையில் அரசியல் பரபரப்பு இடம்பெற்று வருகிறது. தேர்தலுக்கு முகங்கொடுக்கத் தயார் என்கிற போதிலும் அதனை மஹிந்த நிர்வாகத்தின் கீழ் நடாத்த அனுமதிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்சவினால் தொடர்ந்தும் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையே தொடர்வதால் தேர்தலை நடாத்துவதே சிறந்த வழியென பெரமுன கருதுகின்ற நிலையில் தமது ஆதரவாளர்களை மஹிந்த இவ்வாறு உற்சாகப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment