Thursday, January 3, 2019

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டைகள்

January 3, 2019

சுற்றுலாப் பயணிகளுக்காக அரசாங்கம் அறிமுகம் செய்த “டுக் டுக்”  தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த  முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை ஹொட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இந்த அடையாள அட்டை விநியோக நிகழ்வு இடம்பெற்றது.

இதன் முதற்  கட்டமாக  270 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.  முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதற்கு,  சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆர்வம் கொண்டிருப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

நன்றி

தகவல் – ஐ. ஏ. காதிர் கான்

0 comments:

Post a Comment