January 2, 2019
அரச பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பிக்கும் நடவடிக்கையை இம்மாதம் 17ஆம் திகதி மேற்கொள்ள அமைச்சுத் தீர்மானித்துள்ளது.
வவுச்சர்கள் மூலம் சீருடைகளைக் கொள்வனவு செய்யும் போது மாணவர்களுக்கு எதுவித அழுத்தம் கொடுக்காமல், வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு அமைய செயற்படுமாறு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் சீருடையை வழங்கும்போது இடம்பெற்ற ஊழல் மோசடியைத் தவிர்த்து அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணத்தை இடைத் தரகர்களின் தலையீடு இன்றி நேரடியாக பாடசாலை மாணவர்களக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்தச் சீருடை வவுச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment