Wednesday, December 26, 2018

கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவேன்- அமைச்சர் ஹக்கீம்

December 27, 2018

இந்த அரசாங்கத்தில் மீண்டும் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை இயன்றவரை பயன்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சில் (26) கடமைகளை பொறுப் பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டு பொது மக்களின் அபிலாஷைகளை உதறித் தள்ள நான் ஒரு போதும் தயாரில்லை. எனது 25 வருட அரசியல் வாழ்வில் அரைவாசி காலம் எதிர்கட்சியில் கழிந்துள்ளது. ஆளும் கட்சியில் இருந்தாலும், எதிர்க் கட்சியில் இருந்தாலும் பொது மக்களின் தேவைகளை சரிவர புரிந்து பணியாற்றியுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

0 comments:

Post a Comment