December 30, 2018
14 ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட அமைப்பாளர்கள் என்ற பதவியை நீக்கி அவர்களை மாவட்ட முகாமையாளர்களாக நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்தத்தை அடுத்து இவர்கள் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து செயற்பட விருப்பம் இல்லாதவர்கள் சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறி செல்ல முடியும் என ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் இது கட்சிக்குள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி காரியாளயத்தின் சாவி தற்போது மருதானை பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. கட்சி காரியாலயம் கடந்த புதன் முதல் பூட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில் சாவியை எவரும் பொருப்பேற்க முன்வராததால் சாவின்பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதிம் சுதந்திர கட்சியின் 21 எம்பிக்கள் அதிரடி அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க தயாராவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment