Sunday, December 30, 2018

தேர்தல்களை இலக்காகக் கொண்டு பொதுஜன பெரமுன பாரிய வேலைத்திட்டம்

December 30, 2018

தேர்தல்களை இலக்காகக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மக்களை அறிவுறுத்தும் கூட்டங்களை நடாத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கிராம மட்டத்தில் மக்களுக்கு அறிவுறுத்தவும், மாவட்ட மற்றும் தொகுதி ரீதியில் பொதுக் கூட்டங்களையும் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
இதற்கு சமாந்தரமாக உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் பெப்ரவரி மாதம் முதல் ஏப்றல் வரை சகல கிராமங்கள் தோறும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களை ஒன்று திரட்டி பாராளுமன்ற தேர்தல் ஒன்றை பெற்று, அந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கமொன்றை அமைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எவ்வளவுதான் நாங்கள் எல்லோரும் ஒன்று என்று கூறினாலும், பொதுஜன பெரமுன கட்சி தாய்க் கட்சியைப் பிரித்தே பார்க்கும் போக்கை காணக்கூடியதாக இருப்பதாக சாதாரண சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

0 comments:

Post a Comment