Friday, December 28, 2018

சிலை உடைப்பு விவகாரம்: கைது செய்யப்பட்ட 7 பேரிடமிருந்தும் புதிய தகவல்கள்

December 29, 2018

மாவனல்லை உட்பட அண்டிய சில பகுதிகளில் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் ஏழு பேரிடம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இந்த சந்தேகநபர்கள் அடிப்படைவாதக் குழுவொன்றின் உறுப்பினர் எனவும், இவர்கள் வேறு மதஸ்தலங்களுக்கும் தாக்குதல் சேதம் விளைவித்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று மாவனல்லைப் பிரதேசத்தில் காணப்படுவதாகவும் இன்றைய (29) சகோதர தேசிய நாளிதழொன்று அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment