31.12.2018
அனைத்து மாகாண சபைகளினதும் ஆளுநர்களையும் இன்றைய தினத்துக்குள் இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, வடக்கு, வடமேல் மத்திய மாகாண சபைகள் கலைந்துள்ளன. ஊவா , மேல் மற்றும் தென் மாகாணங்கள் கலைக்கப்படவுள்ளன.
இந்த நிலையிலேயே அனைத்து மாகாண சபைகளினதும் ஆளுநர்களை இன்று 31 ஆம் திகதிக்குள் இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
0 comments:
Post a Comment