28.12.2018
தமது தியாகங்கள் மற்றும் வேதனைகளுக்கு நீதி கிடைக்காவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
புதிய அரசின் அமைச்சர்கள் தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு மாத்திரம் செயற்படுவதாக அவர் இதன் போது குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment