Monday, December 31, 2018

புத்தாண்டில் கிளிநொச்சியில் நடந்துள்ள சோகம் -

01.01.2019

வடக்கு தொடரூந்து பாதையில் கிளிநொச்சி – முறிகண்டி பிரதேசத்தில் பல கால்நடைகள் தொடரூந்தில் மோதி உயிரிழந்துள்ளன.

நேற்று இரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதி இவ்வாறு 27 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல விலங்குகள் அப்பகுதியில் உள்ள வீதிகள் மற்றும் தொடரூந்து பாதையில் உலாவி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உலாவி கொண்டிருந்த கால்நடைகளே தொடரூந்தில் மோதுண்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment