December 29, 2018
உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவியுடன் தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் பிரயோகித்த குற்றச்சாட்டின் பேரில் தரனியகல தேசிய பாடசாலை அதிபர் தரனியகலைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான அதிபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் பாடசாலைக்கு வருகை தரும் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரியுள்ளதாக பல முறைப்பாடுகள் பொலிஸில் பதியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உயர் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியிடமும் தனது வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளதாக அம்மாணவியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்களையும், பாடசாலைக்கு வரும் பெண்களையும் துன்புறுத்து வருவதாக இவருக்கு எதிராக பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் பெரும்பாலான நேரங்களில் போதையுடன் இருப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இவரை பதவியிலிருந்து நீக்கி சட்டப்படி தண்டனை வழங்கும் படியும் பெற்றோர் பொலிஸாரிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment