Tuesday, December 25, 2018

அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை!!

25.12.2018

இலங்கையை சுழற்றியடித்துச் சென்ற "சுனாமி" என்னும் ஆழிப்பேரலை விட்டுச் சென்ற நினைவுகளின் 14வது நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் , 2004 ஆழிப்பேரலையால் உயிரிழந்த நமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம் அனைத்து இலங்கை மக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

நாளை காலை 9.25 தொடக்கம் 9.27 மணி வரை இரண்டு நிமிடங்கள் இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்துமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.

0 comments:

Post a Comment