Monday, December 31, 2018

மஹிந்த ராஜபக்சவுக்கு சீன தூதரிடமிருந்து புது வருட 'வாழ்த்து'!


  01.01.2019

மஹிந்த ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்த இலங்கைக்கான சீன தூதர் செங் யுவன் அவருக்கு விசேட புது வருட வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஆட்சியின் போது இலங்கையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை கையகப்படுத்திக் கொண்ட சீனா, தொடர்ந்தும் அவரோடு நல்லுறவைப் பேணி வருகிறது. கொழும்பு துறைமுக நகரத்தினை சீனாவிடமிருந்து மீளப் பெறப் போவதாக தெரிவித்த ரணில் தரப்பும் பின்னர் அதனை அப்படியே சீன பொறுப்பில் விட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

உலகின் பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை கடன் மூலமாக சீனா கட்டுப்படுத்தி வருவதாக மேற்கு நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment