Monday, December 24, 2018

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை முழுமையாக ரத்து செய்யும் நிலமை

DECEMBER 24, 2018

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்து செய்வதற்கான சூழ்ச்சி இடம்பெற்று வருவதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அதன் தலைவர் மகிந்த ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை மறுசீரமைப்பதற்கு குழு ஒன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த செயற்பாட்டின் ஊடாக அந்த பரீட்சையை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

எனவே இதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாதுஎன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment