Monday, December 31, 2018

தெஹிவளையில் சிக்கிய 330 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள்!

01.01.2019

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவு பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் நேற்று தெஹிவளையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.

333.6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் குறித்த பகுதி வீடொன்றிலிருந்து இரு பங்களதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுவே ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகை போதைப்பொருள் என பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment