Monday, December 24, 2018

அமைச்சரவை எண்ணிக்கை: சட்ட மா அதிபரின் உதவியை நாடும் அரசு!

24.12.2018

அமைச்சரவை எண்ணிக்கையை ஆகக்குறைந்தது 32 ஆக அதிகரிப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரவுள்ளது அரசாங்கம்.

ஜனாதிபதி - பிரதமர் தவிர 30 பேரை நியமிக்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்புகின்ற அதேவேளை பதவிகளே தேசிய ஐக்கிய முன்னணி அரசை மேலும் ஸ்திரப்படுத்தும் எனும் நிலை காணப்படுகிறது.

இந்நிலையிலேயே, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்படவுள்ளமையும் ஏலவே உச்ச நீதிமன்றில் சட்டமா அதிபர் வழங்கிய சட்ட விளக்கங்கள் மாற்றமாகவே அமைந்திரந்தமையும் குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment