Thursday, December 27, 2018

உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 30 ஆம் திகதிக்கு முன்னர்

28.12.2018

கல்விப் பொதுத்தராதர பத்திர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித எமது செய்தி பிரிவிற்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

update 28.12.2018 8.35 -----------------

கல்விப் பொதுத்தராதர பத்திர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் இதனை தெரிவித்தார்.

எனினும் உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் டிசம்பர் 28 ஆம் திகதியும், சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மார்ச் 28 ஆம் திகதியும், ஐந்தாம் தரப் புலமை பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஓக்டோபர் 5 ஆம் திகதியும் வெளியிடப்படும் என இதற்கு முன்னர் கல்வியமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment