Thursday, December 27, 2018

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மறைமுக நோக்கம் தொடர்பில் வெளிப்படுத்திய டிலான்

27.12.2018

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் எதிர்க்கட்சி பதவிக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மறைமுக நோக்கம், அரசியலமைப்பு சபையினுள் எதிர்க்கட்சிக்கு உள்ள உரிமைகளை பறிப்பதாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழு இன்றைய தினம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்தில் இன்னமும் பெருபான்மை இல்லை என தெரிவித்தார்.

0 comments:

Post a Comment