Saturday, December 29, 2018

ஒவ்வொரு தொகுதிக்கும் அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கிடு

December 30, 2018

ஒவ்வொரு தொகுதிக்கும் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதான தீர்மானத்தை நிதி அமைச்சர் அறிவித்தார். அதற்கு மேலதிகமாக அமைச்சுகளின் ஒதுக்கீடுகளையும் சேர்த்து, எஞ்சியிருக்கின்ற காலப்பகுதிக்குள் முக்கியமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அதேபோன்று, உரிமை சார்ந்த விடயங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் தீவிரம்காட்டி வருகின்றது. தீர்க்கப்படாத பிரச்சினைகளை ஜனாதிபதி மட்டத்திலும், பிரதமர் மட்டத்திலும் எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருமாக சேர்ந்து பேசியிருக்கின்றோம். எஞ்சியிருக்கின்ற காலப்பகுதிக்குள் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண நாங்கள் அனைவரும் இன்னும் தீவிரமாக செயற்படவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார இராஜாங்க அமைச்சராக பைஸல் காசிம் பதவியேற்றத்தை வரவேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

0 comments:

Post a Comment