Monday, December 24, 2018

பெண் காவற்துறை அதிகாரிக்கு எதிராக மரத்தில் ஏறி உண்ணாவிரதம்

24.12.2018

குருணாகலை - பொது சந்தைக்கு முன்னால் மரமொன்றில் ஏறி நபரொருவர் உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்.

பொல்பிதிகம காவற்துறையின் பெண் அதிகாரியொருவரினால் தனக்கு ஏற்படும் துன்புறுத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை இந்த நபர் இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

பின்னர் சம்பவிடத்திற்கு விரைந்த குருணாகலை சிரேஷ்ட காவற்துறை அதிகாரி உள்ளிட்ட குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நபருக்கு நியாயம் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து குறித்த நபர் தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment