August 2, 2018
நிறமூட்டப்பட்ட, தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களில் இவ்வாறான தரமற்ற நிறமூட்டப்பட்ட பருப்புவகைள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
அளவில் சிறிய இந்த பருப்பு வகையை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மறுவதாகவும் வேகவைக்க வழமையை விட கூடுதலான நேரம் எடுக்கும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன் இவ்வாறான பருப்பு வகைகள் தொடர்பில் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு செய்யுமாறும் பாவனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.






0 comments:
Post a Comment