Friday, October 26, 2018

ஆனந்த அளுத்கமகே கட்சி தாவல்: UNP மேலும் உடையும் அபாயம்!

26.10.2018

ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டாட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துள்ளார்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க மீது அதிருப்தியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பின் வரிசை உறுப்பினர்கள் பலரும் கட்சி தாவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலரி மாளிகையில் இடம்பெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமும் குழப்பத்தில் முடிவுற்றுள்ளதோடு பரபரப்பான சூழ்நிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment