Sunday, August 19, 2018

வௌிநாடு செல்லவுள்ள இலங்கையர்கள் தொடர்பில் இரு அமைச்சுக்களுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

19 AUGUST 2018

வௌிநாடு செல்லவுள்ள இலங்கையர்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை மேலும் செயற்திறனாக மேற்கொள்ளும் நோக்குடன் உள்நாட்டலுவல்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களுக்கிடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன் கீழ் , வௌிநாடுகளுக்கு செல்லவுள்ள இலங்கையர்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் செயற்பாட்டிற்கு பிரதேச செயலகங்களின் மேற்கொள்ளக்கூடிய வகையில் மின்னணு ஆவண அங்கீகார முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த முறையை 332 பிரதேச செயலகங்களில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment