Sunday, July 1, 2018

தேசிய விபத்து தடுப்பு வாரம், நாளை ஆரம்பம்

தேசிய விபத்து தடுப்பு வாரம், நாளை முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை, நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விபத்து தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகளவில் வீதி விபத்துக்கள் இடம்பெற்றுகின்றமையினால், மரணங்களின் எண்ணிக்கையும், உபாதையடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதனால் வாகனச் சாரதிகளை அறிவுறுத்துவதற்காகவே, இவ்வாறான தேசிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக, விபத்து தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment