Tuesday, July 17, 2018

"ஜனாதிபதி வேட்பாளராக, நாமல் நிறுத்தப்படுவார்"

July 17, 2018 

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அல்லாது ராஜபக்ஷ குடும்பத்தில் வேறு எவருக்கும் கூட்டு எதிர்க் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி வழங்கப்படுவதில்லையென ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

பதுளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ராஜபக்ஷ குடும்பத்தில் நாமலுக்கு அன்றி வேறு எவருக்கும் இந்த வேட்பாளர் பதவி வழங்கப்பட மாட்டாது. ராஜபக்ஷ சகோதரர்கள் எவருக்கும் இந்தப் பதவி வழங்கப்பட மாட்டாது என நான் இன்று கூறியதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இது நடைபெறாது என்பதனால் தான் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஒவ்வொருவரும் ஜனாதிபதி அபேட்சகர்கள் யார் என்பதைத் தெரியாது ஒவ்வொருவரையும் கூறிக் கொள்கின்றனர் எனவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment