, 24 JULY 2018
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வாள்களுடன் 13 இளைஞர்களை சாவகச்சேரி காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்த வாள்கள், கம்பிகள் போன்றவற்றையும், அவர்கள் பயணித்த வாகனத்தையும் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தென்மராட்சி- எழுதுமட்டுவாள் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இன்று பிற்பகல் மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சாவகச்சேரியில் இருந்து 13பேர் கொண்ட வாள்வெட்டு குழு வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாளுக்கு சென்றுள்ளது.
இதனை அறிந்த கொடிகாமம் காவற்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றிருந்த நிலையில் குறித்த வாள்வெட்டு குழு அங்கிருந்து தப்பி வடமராட்சி கிழக்கு பகுதிக்குள் சென்றுள்ளனர்.
இதனையடுத்து கொடிகாமம் காவற்துறையினர் கிளிநொச்சி- பளை காவற்துறையினருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் பளை காவற்துறையினர் மேற்படி 13 இளைஞர்களையும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டபோது குறித்த இளைஞர்களிடம் வாள்கள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்த நிலையில் அவற்றையும், அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பளை காவற்துறையினர் கைப்பற்றி கொடிகாமம் காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை கொடிகாமம்
காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.






0 comments:
Post a Comment