01.12.2018
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில் காவற்துறையினர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்துக்குரிய ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதுடைய குறித்த சந்தேகத்துக்குரியவர் இன்றைய தினம் கிளிநொச்சி - வட்டக்கச்சி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டாரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக அவர், குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
நேற்று காலை 6.00 மணியளவில் மட்டக்களப்பு - வவுணதீவு வீதியில் வவுணதீவிற்கு அருகில் உள்ள காவல்துறை காவலரணில் வைத்து காவல்துறை அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment