06.10.2018
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு நகரின் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
தொடங்கொடை மற்றும் மதுகம பிரதேசங்களில் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு நகரின் பல பிரதேசங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.






0 comments:
Post a Comment