Monday, June 11, 2018

பொது மக்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை


12.06.2018

வாக்காளர் பெயர் பட்டியலை தயாரிப்பதற்குரிய ஆவணத்தை துரிதமாக பூர்த்தி செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுமக்களை கோரியுள்ளது.

இவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட ஆவணத்தை கிராம சேவை அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு அந்த ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

வாக்காளர் பெயர் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை கிராம சேவை அலுவலர்கள் தற்போது வீடுகளுக்கு விநியோகித்து வருகின்றனர்.

இந்தப் பணி தற்போது 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment