Monday, June 11, 2018

இவரை நாட்டின் எந்த பகுதியில் பார்த்தாலும் தாமதிக்காதீர்கள் உடனடியாக.......!


பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கு காவல் துறையினர் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

கண்டி வத்தேகம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 24 வயதுடைய கே.பி. சாகர ஸ்வர்ணமால் என்ற சந்தேக நபரை கைதுசெய்யவே பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தால், 071 8591063 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த நபர் பெண் ஒருவரின் தங்க மாலையை பறித்துக்கொண்டு தலைமறைவாகிய காட்சி, சீ.சீ.டி.வி ஒளிப்பதிவு கருவியில் பதிவாகியமையை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவரின் புகைப்படத்தினையும் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

இலக்கம் 328/4 கும்புல்கெதர, யட்டிராவண வத்தேகம முகவரியில் குறித்த இளைஞர் வசித்து வந்துள்ளார் எனவும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

Hiru news

0 comments:

Post a Comment