15 JUNE 2018
இலங்கையில் ஒன்று தொடக்கம் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுள் 73.4 சதவீதமானவர்கள் வீட்டில் பெற்றோரால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 தொடக்கம் 5 வயதுக்கு உட்பட்ட சிறார்களுள் 48.7 சதவீதமானவர்கள் முன்பள்ளிக்கு செல்கின்றனர்.
இதன்ஊடாக அவர்களது மொழியாற்றல், சமுக இணைப்பு, உணர்வு ரீதியான முன்னேற்றங்களுக்கு சாதக நிலைமை சேர்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 5 வயதுக்கு குறைவானவர்களில் 17 சதவீதமானவர்கள் வறுமையில் வாடும் அச்சுறுத்தல் இருப்பதுடன், 15.1 சதவீதமான சிறார்கள் போசாக்கு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment