Saturday, June 23, 2018

ஒருவருக்கு இரட்டைக் குடியுரிமை பெறும் விண்ணப்ப கட்டணம் 3 லட்சம் ரூபா

June 23, 2018

இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பக் கட்டணம் 3 இலட்சம் ரூபா எனவும்,  அவர்களின் மனைவி அல்லது பிள்ளைகளுக்கான கட்டணம் 50,000 ரூபா எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்காக வௌிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து  சுமார் 1000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுவினால் இவை பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் விண்ணப்பதாரிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 800 பேருக்கு ஜூலை முதல் வாரத்தில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Daily Ceylon

0 comments:

Post a Comment