Friday, December 21, 2018

ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத் தேர்தலையும், மாகாண சபை தேர்தலையும் ஒரே தினத்தில் நடாத்த நடவடிக்கை...


December 22, 2018

நாட்டிலுள்ள சகல மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே நாளில் நடாத்த எதிர்பார்த்துள்ளதாக மாகாண
சபைகள் மற்று உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை வெவ்வேறு தினங்களில் நடாத்தி அரசாங்கத்தின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து அதிக செலவை ஏற்படுத்தும் முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். இதற்கு முன்னைய அரசாங்கங்கள் இதனைத் தான் செய்தன.

இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை மாத்திரமல்ல, முடியுமானால் ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத் தேர்தலையும் கூட ஒரே தினத்தில் நடாத்த நடவடிக்கை எடுக்கும். இதனால், நாட்டுக்கு ஏற்படும் செலவும் குறைகின்றது. நாம் இந்த இடத்துக்கே வர வேண்டியுள்ளோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  D C

0 comments:

Post a Comment