June 12.2018
நிந்தவூர் அல்அமீர் விருந்தினர் வளாகத்தில் தலைவர் கலாபூசனம் பகுர்தீன் அவர்களின் தமைமையில் அண்மையில் இப்தார் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அமைச்சர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் அரச உயர் அதிகாரிகள் நலன்விரும்பிகள் புத்தி ஜீவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்வைபவத்திற்கு சாய்ந்தமருது வர்த்தகசங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமான அல் ஹாஜ் MM முபாறக் அவர்கள் விசேட விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துரை வாழங்கினார்.
தான் வர்த்தகத்துறையில் சிறந்து விளங்குவதற்கு ஊடகமும் ஊடகவியலாளரும்தான் காரணம். சமூகத்தில் காணப்படுகின்ற பிரட்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறுவதில் ஊடகங்கள்பெரும் பங்களிப்பை வழங்குகின்றது. என்றார் இதன் போது ஊடகவியலார்களுக்கு பரிசுப்பொதிகளும் வழங்கப்பட்டன.
அனுப்புனர்
ஐ. ஹுஸைன்தீன் பிராந்திய செய்தியாளர்.
0 comments:
Post a Comment