Monday, December 3, 2018

தடையுத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடும் மஹிந்த

December 03, 2018

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ள நிலையில் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மனு மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment