November 3, 2018
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பதற்ற நிலைமை தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உயர் பீட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரரின் நிலைப்பாடு நாளை (04) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றைக் கூட்டி அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை ஏற்படுத்துவதில் மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரருடன் இணைந்து மும்முரமாக செயற்பட்டவர்களில் அத்துரலிய தேரரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment