Saturday, November 3, 2018

இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டேன்- ராஜித அறிவிப்பு

November 3, 2018


தான் புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியொன்றை ஏற்க தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொய்யாவை என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விசேட அறிவித்தல் ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனநாயகத்துக்கு எதிரான எந்தவொரு சதிகார நடவடிக்கைக்கும் தான் ஒருபோதும் உடன்படப் போவதில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சுப் பதவியொன்றை எடுத்துக் கொண்டு ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபடப் போவதில்லையெனவும் அவர் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

0 comments:

Post a Comment