October 25, 2018
வடக்கில் பாரியளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவரும் ஆவாக் குழுவை மூன்று மாதங்களில் அடக்குவேன் என்று ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஐரோப்பாவில் கூறியுள்ளார்.
அவர் எமது ஆட்சி நடந்த 5 ஆண்டுகளில் ஏன் அதனைச் செய்யவில்லை. அப்போ ஆளுநருக்கும் ஆவாக்குழுவுக்கு தொடர்புகள் உள்ளனவா?
இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். இன்று நல்லூர் இராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் இவ்வாறான ஒரு கேள்வியை எழுப்பி அவருக்கும் ஆவா குழுவுடன் தொடர்புகள் உள்ளன என்றவாறு சாட்டையடி கொடுத்துள்ளார்.






0 comments:
Post a Comment