Thursday, August 16, 2018

ஜனாதிபதிக்கு இராணுவ, வைத்தியசாலையில் சிகிச்சை

August 16, 2018 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகவீனம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் ஜனாதிபதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சளி தொடர்பான வருத்தம் காரணமாகவே ஜனாதிபதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

தற்போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் ஓய்வு பெற்று வருவதாக ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Jaffna Muslim  

0 comments:

Post a Comment