July 23, 2018
`இந்தியாவை பொறுத்தவரை கற்பழிப்பு கொலை போன்ற விடயங்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது.
கேட்டால் ஆடை பிரச்சினை, பெண்கள் உணர்வுகளை தூண்டுகிறார்கள் போன்ற விடயங்களே அதிகம் கூறப்படும் குற்றச் சாட்டுகள்.
இதில் அண்மையில் நடந்த கொடூரம் 17 கயவர்களால் 11 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப் பட்டது தான்.
இந்த விடயத்திற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனரும் நடிகையுமான லக்சுமி ராமகிருஷ்ணன் தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.
அம்மாவின் ஆடை விலகினால் அதில் என்ன இருக்கு என்று பார்ப்பீர்களா? என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கு என்ன இருக்கிறதோ அது தான் அனைத்து பெண்களிடமும் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஏன் சின்ன குழந்தைகளை கூட விட்டு வைக்கிறீர்கள் இல்லை என கேள்வியும் எழுப்பி உள்ளார். இவ்வாராக சிறுவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டு ஆண்களும் கொந்தளிக்கின்றனர்.
நிச்சயம் இந்த கேள்வியை தான் ஒவ்வொரு ஆண்மை உள்ள ஆண் மகனும் கேற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment