June 10, 2018
ரூட்ஷெல்ட். பிரிட்டனில் பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர். பிரிட்டன் அரசாங்கம் இவரிடமிருந்து கடனாக பெற்று தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு மகா செல்வந்தராக வாழ்ந்தவர்.
ஒருநாள் தனது பொக்கிஷங்கள் (கஜானா) நிறைந்த அறைக்குள் நுழைந்து கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென திறக்க முடியாதவாறு கதவுகள் மூடப்பட்டுவிட்டது.
பல நாட்கள் பசி பட்டினியாக இருந்து மரணிக்கும் முன் சுவற்றில் சில வரிகளை எழுதினார் அதில் சில…
“நான் உலகில் மிகவும் உயர்ந்த மனிதனாக வாழ்ந்தேன். ஆனால் எனது சொத்துக்கள் என் முன் இருக்க, அந்த சொத்துக்களால் எனது பசி, தாகத்தைக் கூட போக்க முடியாத ஏழையாக மரணிக்கிறேன்”. அவர் மரணித்து பல வாரங்களுக்கு பின்னரே அவரின் உறவினர்களுக்கு தெரியவந்துள்ளதாம்.
பணத்தைக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்று எண்ணும் கபோதிகளுக்கு இந்தக் கதை ஒரு பாடமாக அமையும்.
0 comments:
Post a Comment