Wednesday, December 19, 2018

09 வர்த்தக நிலையங்கள் தீயில் எரிந்து நாசம் - சிலாபத்தில் சம்பவம்


20.12.2018

சிலாபம் நகர சபைக்கு சொந்தமான வீதி​யோர வர்த்தக தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 09 வர்த்தக நிலையங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து சிலாபம் பொலிஸார் சிலாபம் நகர சபை தீயணைப்பு பிரிவுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டிகைக் காலம் என்பதால் வீதியோர வர்த்தக நிலையங்கள் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

எவ்வாறாயினும் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்படுத்தியதால் பாரிய அனர்த்தம் தவிக்கப்பட்டிருப்பதாக பிரதேசவாசி ஒருவர் கூறினார்.

0 comments:

Post a Comment