10.11.2018
தான் பொது ஜன பெரமுன கட்சியில் இணைவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளா்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து பரந்த கூட்டணியின் கீழ் பொது தோர்தலில் வெற்றி பெற எதிர்பார்ப்பதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கு ஊடாக நாமல் ராஜபக்ச இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்களிடம் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment