Monday, November 5, 2018

ஜப்பான், அமெரிக்க நிதியுதவிகள் முடக்கம்: ரணில்

04.11.2018

தற்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையின் பின்னணியில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா இலங்கைக்கான நிதியுதவிகளை முடக்கி வைத்திருப்பதாக தெரிவிக்கிறார் ரணில் விச்கிரமசிங்க.

மஹிந்த ராஜபக்சவின் திடீர் நியமனத்தையடுத்து ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்தும் தம்மிடம் பெரும்பான்மைப் பலமிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருவதுடன் அபிவிருத்தியடைந்த நாடுகள் இலங்கையின் அரசியல் நிலவரம் தொடர்பில் கவலை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment