Sunday, July 22, 2018

மயிரிழையில் உயிர் தப்பியுள்ள ஆப்கான் ஜனாதிபதி

July 23.2018

காபுல் விமான நிலையத்தின் மீது நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கான் உப ஜனாதிபதி அப்துல் ரஷீட் தொஸ்தம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலில் உள்ள எதிர்த்தரப்பினரை சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் அவரை நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இதனால், கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான காலம் துருக்கியில் தலைமறைவாகியிருந்தார்.
இவர் மீண்டும் நேற்று தாய் நாட்டுக்குத் திரும்பிய போதே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.  

0 comments:

Post a Comment