2018-11-09
மத்திய வங்கி குண்டுவெடிப்பு வழக்கில் 200 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள,விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மூவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.
72 க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தனர் என்று, குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அந்த மூவரையும் கொழும்பு மேல்நீதிமன்றம் குற்றவாளிகளாக இனங்கண்டு தண்டனை வழங்கியிருந்தது.
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 200 வருடங்கள் சிறைத்தண்டனையை இரத்து செய்யுமாறு கோரியே மேற்படி மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தீபாலி விஜயசுந்தர மற்றும் அச்சல வேங்கபுலி ஆகியோரின் தலைமையிலான நீதியரசர் குழாமினால் நேற்று அழைக்கப்பட்டது. அந்த மனுவை பரிசீலனைக்கு எடுக்காமலே அதனை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த மேன்முறையீட்டு மனு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களான விக்னேஸ்வரநாதன் பத்திரன், கதிராமன் சிவகுமார் மற்றும் செல்வகுமார் நர்மதன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டிருந்தார்.
0 comments:
Post a Comment