Tuesday, June 12, 2018

.கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு! பௌத்த தேரர்கள் இருவர் படுகாயம்


13.06.2018







கதிர்காமம் – கிரிவேஹரா பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பௌத்த தேரர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கிரிவேஹரா தலைமை பொறுப்பாளரான வன கொபவாக தம்மிந்த தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர் இருவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர்களே இந்த துப்பாகிச் சூட்டை நடத்தியுள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


நன்றி

தமிழ்வின்

0 comments:

Post a Comment